Wed05222013

Last update03:52:35 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் உலகச்செய்திகள் 150 அகதிகளுடன் சென்ற படகு இந்தோனேசிய கடலில் மூழ்கியது, அறுவர் கரையேறினர்.

150 அகதிகளுடன் சென்ற படகு இந்தோனேசிய கடலில் மூழ்கியது, அறுவர் கரையேறினர்.

சுமார் 150 அகதிகளுடன் சட்டவிரோதமாக சென்ற படகொன்று இந்தோனேசிய கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் அறுவர் மட்டும் கரையேறியுள்ளனர். இப்படகில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பல பெண்களும் அடங்குவதாக அவ் அறுவரும் தெரிவித்துள்ளனர். இந்த படகை தேடும் நடவடிக்கைகளில் இந்தோனேசியாவை சேர்ந்த இரண்டு ஹெலிக்கெப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சட்டவிரோத படகில் சென்றவர்கள் ௭ந்த நாட்டை சேர்ந்தவர்கள்? ௭ன்பது போன்ற விபரங்கள் வெளியாகவில்லை. எனினும் இப்படகில் பயணித்தவர்களில் இலங்கையர்களும் அடங்கியிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிருக்கு ஆபத்துக்கள் ஏற்படலாம் என்றதனால் தான் கடல் மூலம் அவுஸ்திரேலியா வருவதை தடுக்கும்படி கேட்டுக்கொண்டோம் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.