பிரிவினையைத் தூண்டும் வகையில் “தமிழ்ஈழம்” என்ற சொல்லைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்வது குறித்து சிறிலங்கா
தேர்தல் ஆணையாளர் விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஏற்கனவே தேர்தல் செயலகம் ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ரெலோ கட்சி மட்டுமே தற்போது தமிழீழம் என்ற சொல்லை தனது கட்சிப் பெயரில் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலி சின்னங்களை கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என அண்மையில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தற்போது சிறிலங்கா தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில் தமிழ்ஈழ விடுதலை இயக்கம் (ரேலோ) மட்டும் தான் தமிழ்ஈழம் என்ற சொல்லைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



