Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் இந்தியா இராமேஸ்வரம் மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் அரிவாளால் வெட்டி விரட்டியடிப்பு!

இராமேஸ்வரம் மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் அரிவாளால் வெட்டி விரட்டியடிப்பு!

கடலுக்கு சென்ற மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் அரிவாளால் வெட்டி விரட்டியடித்துள்ளனர். இராமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை அறுத்தெறிந்துள்ளனர்.

 

வெள்ளப்பள்ளத்தில் இருந்து பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்களை வழிமறித்த சிறிலங்கா கடற்படையினர் அரிவாளால் தாக்கி விரட்டியடித்துள்ளனர். மேலும் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்திய கடற்படையினர், அவர்களின் மீன்களையும் பறித்துச் சென்றனர்.

இதையடுத்து 10 படகுகளில் இருந்த மீனவர்கள் கரைக்குத் திரும்பினர். மற்றவர்களும் கரைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் இராமேஸ்வரம் மீனவர்களது வலைகளையும் சிங்கள கடற்படையினர் அறுத்தெறிந்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.