எலும்பு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளுக்கு தற்போது செயற்கையாக தயாரிக்கப்பட்ட எலும்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.![]()
மனித எலும்பை ஆய்வகத்தில் வளர்த்து அதை பயன்படுத்தும் முயற்சியில், இஸ்ரேல் டெக்னீசியன் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் பேராசிரியர் அவினோம் கதூரி தலைமையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் எலும்பு தேவைப்படுபவரின் கொழுப்பு திசுக்களில் இருந்து ஸ்டெம் செல்களை எடுத்து ஆய்வகத்தில் ஒரு மாதம் வளர்த்தனர். அதற்காக நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
இதன் மூலம் 2 இஞ்ச் அளவுக்கு எலும்பு வளர்ந்தது. இதை அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் பொருத்தினால் அப்பகுதியில் உள்ள திசுக்களுடன் சேர்ந்து விடும்.
இதற்கான பரிசோதனை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது. அதன் பிறகு இந்த சிகிச்சை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


