Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட் வேண்டாம் அரசு பங்களா: சச்சின் எம்.பி., திடீர் முடிவு

வேண்டாம் அரசு பங்களா: சச்சின் எம்.பி., திடீர் முடிவு

 

புதுடில்லி: ""எம்.பி., யாக இருப்பதே கவுரவம் தான். டில்லியில் தங்குவதற்கு அரசு பங்களா வேண்டாம். இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகும்,'' என, தெரிவித்துள்ளார் சச்சின்.

 

இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். சமீபத்தில் ராஜ்ய சபா உறுப்பினராக பதவியேற்றார். இவருக்கு டில்லியில் காங்., பொதுச்செயலர் ராகுல் காந்தியின் வீட்டுக்கு எதிரே, பங்களா ஒதுக்கப்பட்டது. இதை சச்சின் ஏற்க மறுத்துள்ளார். அவர் கூறியது:

நான் டில்லிக்கு வந்து தங்குவது சில நாட்கள் தான். எப்போது டில்லி வந்தாலும் ஓட்டலில் தங்குவதற்குத் தான் முன்னுரிமை கொடுப்பேன். எம்.பி., ஆகி விட்டேன் என்பதற்காக, சில நாட்கள் தங்குவதற்கு, அரசு பங்களா வேண்டாம். இதில் எனக்கு விருப்பமும் இல்லை.

இதுபோன்ற செயல்கள், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் என நினைக்கிறேன். யாருக்கு தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு ஒதுக்கினால் நல்லது. என்னைப் பொறுத்தவரை எம்.பி.,யாக இருப்பதே கவுரம். இதற்காக கொடுக்கப்படும் சலுகைகள், உரிமைகள் முக்கியமல்ல.

பங்களாவை ஏற்க மறுத்தது, எனது பொறுப்புகளை பாதிக்காது. பார்லிமென்ட்டின் ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும், சில நாட்கள் பங்கேற்க முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சச்சின் கூறினார்.